Monday, October 17, 2011

தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்

தனிப்பட்ட மத உணர்வுகளை, "சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்" என்றதொரு அற்புதமான வாசகத்தை இழிவுபடுத்தும் விதமாக பொறுப்பின்றி பின்னூட்டமிட்டிருக்கும் தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான இரமணிதரன் அவர்களையும், தமிழ்மணத்தையும் கண்டித்து எனது தனிப்பட்ட வலைப்பூக்கள் அனைத்தையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கிக்கொள்கிறேன்!





மேலதிகத் தகவல்களுக்கு : காண்க

இப்படிக்கு,

அருணையடி (எ) நாமக்கல் சிபி

Friday, January 28, 2011

BOYCOTT ICCI WORLD CUP 2011



Dear World Cup 2011 Sponsors,

As we are deciding to boycott this Cricket World Cup 2011, to contempt the Indian and Tamil Nadu Governments showing negligence and lethargicness on protecting TAMIL FISHERMAN, who are being killed by SRILANKAN COASTGUARDS very frequently, We are informing you, since you are sponsoring those tournaments.


TAMIL NADU Cricket Fans

Tuesday, March 09, 2010

தேடலும் என் தேவதையும்

தேடிக் கொண்டே
இருக்கிறேன்
எனக்கான
தேவதையை!

தேடல்
தொடர்ந்துகொண்டேதான்
இருக்கிறது!

எனக்கான
தேவதையே!
எங்கிருக்கிறாய் சொல்!
எப்போழுது
எனைத் தேடி வருவாய்?


திசை தெரியவில்லை!
தேதியும் அறியவில்லை!
இருப்பினும்
தேடிக் கொண்டே இருக்கிறேன்!


என் காதோரம்
மெல்லியதாய்
உன் குரல் மட்டும்
கேட்கிறது!
இப்பொழுது
நீயும்
என்னைத்
தேடுகிறாயென்று!

Tuesday, June 23, 2009

சாபங்கள் பலிக்கட்டும்.........!

உங்கள் வீட்டுப் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில்
போடட்டும்
என்று சொன்னதற்கே
துள்ளியெழுந்து வந்து
துடித்து வந்து
கேள்வி கேட்கும்
கணவான்களே!
அங்கே எங்கள்
வீட்டுப் பெண்கள்
துகிலுரிக்கப் பட்டு
துறத்தித் துறத்திக்
கற்பு சூறையாடப் பட்டபோது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

எவளுக்கோ நடக்கிறது!
நமக்கென்ன என்றுதானே!
இன்று அந்நிலை
நம் வீட்டுப் பெண்களுக்கும்
வந்திடுமோ
என்ற அச்சம்
உங்களுக்கேன் வந்தது?

பாவத்தில் பங்குபெற்றோர்க்குத்தானே
சாபங்கள் பலிக்கக் கூடும்?
மடியினில் கனமில்லாமல்
மனதினிலேன் பயம் கொண்டீர்?

உள்ளுக்குள் உறைக்கின்றதென்றால்
நம் நாடிழைத்த
கேட்டில் நீரும்
பங்கு பெற்றீரா?
அல்லது
எம்மவர்க்கு நேர்ந்த
கொடுமை கண்டு
கைகொட்டி ரசித்தீரா?

சாபம் கண்டு
உமக்கென்ன பயம் வந்தது?
பாவம் செய்தது உண்மையெனில்
சாபத்தின் பலனை
தின்றுதானே ஆகவேண்டும்!

நரமாமிசம் புசித்தவர்களைக்
காக்கத்தானே
ஐநா சபையினிலும்
ஆதரித்துப் பேசுகின்றீர்!
இரக்கமற்ற இந்தியா
இருந்தாலென்ன
அழிந்தால்தான் என்ன?

அந்நிய நாட்டுப்
பிரச்சினையில்
தலையிடுதல் நடவாதென்று
சொல்லிக் கொண்டுதானே
உளவுக் கருவிகளும்
வக்கணையாய்
ஆயுத உதவிகளும்
செய்து முடித்தீர்!

செத்து மடிந்த
எங்கள் அண்ணன்மாரின்
ஆவிகள்
உங்களைச் சும்மா விட்டுவிடுமா?
கதறியழுதத் தாய்மார்கள்
சார்பில்தானே
தாமரையும்
சாபம் விடுத்தார்!

தவறிழுத்தோர்தானே
அஞ்ச வேண்டும்?
சாப விமோச்சனம்
தேட வேண்டும்?

சாபம் விடுத்தல்
தவறென்று
தடியெடுத்து வந்த
தைரிய சாலிகளே!
உங்கள் துள்ளல்தானே
நிரூபிக்கிறது
பாவத்தில் உங்களுக்கும்
பங்கு உண்டு என்பதனை?

ஏ பாரதமே!
எம்மினத்திற்கெதிராக
நீ தவறிழைத்தது
நிஜமென்றால்
அக்கருஞ்சாபம் பலிக்கட்டும்!
பாரத மாதா
ஒரு
பத்தினி அல்லவென்று
பாரோர் தூற்றட்டும்!

Friday, June 19, 2009

வீர வணக்கங்கள்

வீரர்கள்
வீழ்த்தப்படுவதில்லை!
விதைக்கப் படுகின்றனர்!

விதைகள்
விருட்சங்களாகும்
விரைவில்!

நாங்கள்
பிறந்த இடம்
தவறாகிவிட்டது!
இல்லையெனில்
உன்னுடனேயே
இருந்திருப்போம்
சமர் களத்தில்!

இது இரங்கற்பா
ஆகிவிடாது!
நீ என்றென்றும்
இருக்கிறாய்
எங்கள் மனதில்!
எங்கள் உறுதியில்!
எங்கள் மனோதிடத்தில்!
நம்புகிறோம் இன்னும்!
உம் விடியல்
பிறக்கும்
விரைவில்!

Monday, March 16, 2009

மழைத் துளிகள்!



பெரு மழை நின்றுவிட்ட
அமைதியானதொரு
மாலைப் பொழுதில்
விடாது வீசும்
சில்லென்ற காற்றும்
உன் கேசம்
கலைத்த பொழுதுகளை
நினைவு படுத்தி விடுகிறது!

உறங்கங்கள் தொலைத்த
இரவுப் பொழுதுகளின்
நிசப்தம்
கவிதைகளின்
முயற்சிகளில்
கசங்கிய காகிதங்களாய்

மனதின் வலி
மீண்டு மீண்டும்
உன்னையே நினைவூட்டுகிறதே!

காரணமேயின்றி
கணப் பொழுதில்
"என்னை மறந்துவிடென்று"
நீ கூறிச் சென்ற
அந்த சாலையின் முடிவு
மீண்டும் மீண்டும்
கடந்து செல்லும்போதெல்லாம்
நின்று திரும்பிப்
பார்க்கச் செய்கிறது!

ஒருவேளை
நீ திரும்பவந்து
எனக்கெனக்
காத்திருப்பாயோ என்று?

Saturday, February 14, 2009

நீ, நான் மற்றும் நம் காதல்


நமக்காகக் காதலா
காதலுக்காக நம்மையா
எப்படிப் படைத்தான்
இறைவன்?
எப்படி இருந்தாலும்
நமக்காகக் காதலும்
காதலுக்காக நாமுமாய்த்தான்
இருக்கின்றோம்!
உனைத் தீண்டும்போதெல்லாம்
கன்னம் சிவக்கிறாயே!
நான் தொட்டுவிடக் கூடாதென்று
எச்சரிக்கைச் சின்னமா?
வியந்து கேட்டால்
இன்னும் சிவக்கிறாய்!
"ச்சீ போடா" என்கிறாய்!


Add Imageஅணைப்பின் சுகம்
அவ்வப்போது தருகிறாய்!
எப்போதும் கிடைக்குமா
என்றால்
"போடா மடையா"
என்று
பொய்க்கோபம் காட்டி
இன்னும் இறுக
அணைத்துக்கொள்கிறாய்!
கொள்கைப் பிடிப்பில்
உறுதியாய்த்தான் இருக்கிறாய்!

நேசம் என்றால்
என்னவென்று
நெஞ்சில் சாய்ந்து
கேள்வி கேட்கிறாய்?
அடி! மடப் பெண்ணே!
நீ என் மேல்
காட்டுவதன் பெயர்தானடி
நேசம்!
அருகில் இருக்கும்போதும்
இமைக்காமல் பார்க்கிறாய்!
தொலைவில் நகர்ந்துவிட்டால்
விழிகளால் தேடுகிறாயே!
இதுதானடி நேசம்!
இதற்குப் பெயர்தானடி
காதல்!


அப்படியும்
உனக்குப் புரியவில்லை
என்றுதானே
உருவம் கொடுத்து
விளக்கி இருக்கிறேன்!
இதோ உன் நேசம்!
இதோ நம் காதல்!
உன் மடியினில்
உறங்குதடி!
உருவம் இல்லாமல்
நம் இருவருக்குள்ளும்
இயங்கி வந்த
நம்மை இயக்கி வைத்த
அந்த
உன்னதமான காதல்!