Wednesday, March 20, 2013

மாணவர் என்றோர் இனமுண்டு!


இருப்பாய் தமிழா நெருப்பாய் 
இருந்தது போதும் செருப்பாய் 
ஏவுகணைகளைத் தொடுப்பாய்  
விடியலை நமக்கெனக் கொடுப்பாய்!

அரசியல் வஞ்சகர் கண்டோம்! 
ஆண்டவர் நாடகம் கண்டோம்! 
மாணவர் படைதனைக் கண்டே 
நம்பிக்கை உள்ளத்தில் கொண்டோம்! 

தமிழன் என்றோர் இனமுண்டு! 
தனியே அவர்க்கொரு குணமுண்டு! 
மாணவர் என்றோர் இனமுண்டு! 
தனியே அவர்க்கோர் எழுச்சி உண்டு!

மாணவம்  எழுப்பிய வேள்வி இது!
மானிடம் காத்திடும் கேள்வி இது!
தமிழா நமக்கும் உணர்வுண்டா?
இனியும் பொறுத்தால் உயர்வுண்டா? 

அரசியல் பிழைத்தனர்  கோடிகளாய்!
சமயத்தினால் மறந்தனர்  பேடிகளாய்!
வீழ்வோம் என்று திளைத்தோரே! 
எழுந்தோம் என்று  திகைத்திடுவீர்!

மானிடப் புரட்சிகள் கண்டிருப்பர்! இனி 
மாணவப்  புரட்சியைக் கண்டிடுவீர்!   
ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும்   
இவ்வுணர்வுத் தீயினைக்  கொண்டிருப்பர்!