Saturday, September 02, 2017

விடுதலைப் போராட்டத்திற்கான விதை!


இது இன்னொரு
விடுதலைப் போராட்டத்திற்கான தொடக்கம்!
கல்விச் சுதந்திரம்
இங்கே பல்லிளிக்கிறது!
காவிப் பாசிசம்
ஒரு உயிரைக்
காவு வாங்கியிருக்கிறது!

பல உயிர்களைக்
காப்பாற்ற வேண்டிய
அந்த ஒரு உயிரைக்
காப்பாற்ற முடியாமல்
கையறு நிலையில்
நாம்!

ஆளும் அரசு
அடிமைச் சாசனத்தை
எழுதிக் கொடுத்திருக்கிறது
அந்தச் சதிகாரக் கும்பலுக்கு!

இன்னும் நாம்
வாளாவிருந்தால்
தமிழினத்தை
வரலாற்றில் கூட
அழித்தொழித்து விடுவார்கள்!

அனிதாவின் மரணம்
அர்த்தமற்றதாகி விடக்கூடாது!
இது விடுதலைப் போராட்டத்திற்கான
விதை!
விருட்சமாக்க வேண்டியது
நம் கடமை!

சோர்ந்து விடாதீர்கள்!
நாம் இன்னும்
சோரம் போய்விடவில்லை!

நம் கோபக் கனலை 
கொழுந்து விட்டு எரியச் செய்வோம்!
காவிப் பாசிசத்தின்
சாம்பல் கூட மிஞ்சக் கூடாது!

அரசியல் வாதிகளுக்குத்தான்
மடியில் கனம்!
நமக்கென்ன பயம்?
கட்சி பேதங்களின்றி
சாதி மதம் களைந்து
களம் காண்போம்!

உறக்கம் தொலைத்தாலென்ன?
விடியலுக்காக விழித்திருப்போம்!
விடுதலைக்கான வழி வகுப்போம்!
கல்வி நமது பிறப்புரிமை!

நினைவில் கொள்ளுங்கள்!
நாளைய அனிதா
நம் மகளாகவும் இருக்கலாம்!

- நாமக்கல் சிபி

No comments:

Post a Comment