Wednesday, November 01, 2006

22 : இலவசமாய்!


கடந்து செல்கையில்
கண்கள் பார்த்தேன்
இலவசமாய்
சில சிமிட்டல்கள்!

பார்வையைக் கொஞ்சம்
தருவாய் என்றேன்!
இலவசமாய்
கொஞ்சம் புன்னகை தந்தாய்!

புன்னகை கொஞ்சம்
கடனாய்க் கேட்டேன்!
இலவசமாய்க் கொஞ்சம்
பூக்கள் தந்தாய்!

பூக்கள் கொஞ்சம்
தூவிடு என்றேன்!
இலவசமாய் உன்
சிநேகம் தந்தாய்!

சிநேகமும் எனக்கு
போதாதென்றேன்!
இலவசமாய் கொஞ்சம்
வெட்கம் தந்தாய்!

வெட்கம் உனக்கு
அழகு என்றேன்!
இலவசமாய் நீ
காதல் தந்தாய்!

காதலால் நானும்
மகிழ்ந்திருந்தேனே!
இலவசமாய்க்
கல்லறை
ஏனடி நீயும் தந்தாய்?

நினைவினைக் கொடுத்த
இறைவா நீயும்
இலவசமாய்
மறதியைக் கொடுத்தால்
குறைந்தா போவாய்?

69 comments:

  1. இது தேன்கூடு போட்டிக்கா?

    நன்றாக வந்திருக்கிறது கவிதை....

    ReplyDelete
  2. தேன்கூடு போட்டிக்கேதான் லக்கியாரே!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. //நினைவினைக் கொடுத்த
    இறைவா நீயும்
    இலவசமாய்
    மறதியைக் கொடுத்தால்
    குறைந்தா போவாய்?//

    நல்லாருக்குங்க சிபி. போட்டியில் வென்றிட வாழ்த்துகள். இலவசம் இலவசம்னு இத்தனை வாட்டி சொல்லிருக்கீங்க...கொத்தனார் ராயல்டிக்கு வந்து நிக்கப் போறாரு
    :)

    ReplyDelete
  4. வாழ்த்திற்கு நன்றி தலை!

    இலவசம் ராயல்டிக்கு வந்தாருன்னா அவருக்கு ரெண்டு பின்னூட்டம் இலவசமாப் போடுவோம்!

    இக்கவிதையில்(தலைப்புடன் சேர்த்து) இலவசம் என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சரியாகக் கூறும் முதல் நபருக்கு இலவசமாய் இரண்டு பின்னூட்டங்கள் வழங்கப்படும்.

    :))

    ReplyDelete
  5. //இலவசமாய்
    மறதியைக் கொடுத்தால்
    குறைந்தா போவாய்?//
    கடைசி வரி ரொம்ப நல்லா இருக்குங்க. ரொம்ப நல்ல கவிதை

    ReplyDelete
  6. /./
    இக்கவிதையில்(தலைப்புடன் சேர்த்து) இலவசம் என்ற வார்த்தை எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது

    /./


    9(தாரா)

    ::)

    ReplyDelete
  7. மின்னல் 9 முறை சரியான விடை.

    அந்த விடையை கூறிய விதத்தில் நீர் எங்கோ சென்று விட்டீர். (எங்கயோ பூயிட்டீங்க மின்னல்)

    :))

    இலவசப் பின்னூட்டம் இரண்டும், எனக்குப் பிடித்த விதத்தில் விடையைக் கூறியமைக்காக ஸ்பெஷல் பின்னூட்டம் இரண்டும் விரைவில் உமது பதிவில் வந்து சேரும்.

    ReplyDelete
  8. யோவ், இது என்ன கலாட்டா? இலவசமுன்னா எழுத எவ்வளவோ இருக்க இது என்ன கவுஜ?

    உனக்கு ஆண்டவன் எடிட் பட்டன் வைக்கவே மறந்துட்டானா? (உன்னைத் திருத்தவே முடியாது!) :)

    ReplyDelete
  9. இளா, கார்த்திக் பிரபு

    பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  10. //இலவசமுன்னா எழுத எவ்வளவோ இருக்க இது என்ன கவுஜ?
    //

    கொத்ஸ்,

    கவுஜ எழுதினதைச் சொல்றீங்களா? காதலை எழுதினதைச் சொல்றீங்களா?

    //உனக்கு ஆண்டவன் எடிட் பட்டன் வைக்கவே மறந்துட்டானா?//

    நினைவை எமக்குக் கொடுத்துவிட்டு மறதியை அவனே வைத்துக் கொண்டான்!

    ReplyDelete
  11. //நினைவினைக் கொடுத்த
    இறைவா நீயும்
    இலவசமாய்
    மறதியைக் கொடுத்தால்
    குறைந்தா போவாய்? //

    நினைக்க தெரிந்த மனமே, உனக்கு மறக்க தெரியாதா?

    பழக தெரிந்த மனமே, உனக்கு விலக தெரியாதா?

    ReplyDelete
  12. கொத்துஸ்,
    ஒடுங்க ஒடுங்க

    கவுஜ்

    கவுஜ்

    சுச்சூ

    ReplyDelete
  13. //பூக்கள் கொஞ்சம்
    தூவிடு என்றேன்!
    இலவசமாய் உன்
    சிநேகம் தந்தாய்!

    சிநேகமும் எனக்கு
    போதாதென்றேன்!
    இலவசமாய் கொஞ்சம்
    வெட்கம் தந்தாய்!

    வெட்கம் உனக்கு
    அழகு என்றேன்!
    இலவசமாய் நீ
    காதல் தந்தாய்//

    ஆஹா எங்கே மறைத்திருந்தீர்கள் இந்த வெட்கப்பூக்களை ?? வெட்கப்படும் காதலான அழகு கவிதை இலவசமாய் எங்களுக்கு :)) வாழ்த்துகள் தொடருங்கள் சிபி ! :))

    ReplyDelete
  14. கடைசி வரிகளை,....

    "நினைவினைக் கொடுத்த
    இறைவா இந்த
    மறதிக்கு என்ன விலை வேண்டும்
    சொல்! தந்துவிடுகிறேன்!"

    என முடித்திருந்தால் ஒரு பஞ்ச் இருந்திருக்குமோ?

    நல்ல கவிதை!

    இலவசமாக.......
    வாழ்த்துகள்!
    வெற்றி பெற!

    ReplyDelete
  15. இலவசமாய்
    கவிதை
    எழுதி
    எங்களை
    பரவசப்படுத்திய
    சிபியாரே,
    வாழ்க நின் புகழ்!
    வெற்றிக் கனியை
    பறிக்க
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. என்ன சார், எப்படா ரெடி, ஜூட் சொல்வாங்கண்ணு காத்திருந்த மாதிரி, டகால் னு ஒரு கவிதைய எடுத்து விடறீங்க.

    கலக்குங்க.
    கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  17. அதென்ன சிபி, தலைப்புக் கொடுத்த அடுத்த நொடியே கவிதை எழுதித் தள்ளிடுறீங்க!!

    ReplyDelete
  18. //அதென்ன சிபி, தலைப்புக் கொடுத்த அடுத்த நொடியே கவிதை எழுதித் தள்ளிடுறீங்க!! //

    சிபி, நம்ம அக்ரிமெண்ட் பொன்ஸுக்கு தெரிஞ்சிடுச்சா :-)


    போட்டிக்கான முதல் படைப்பே அசத்தலாக வந்திருக்கிறது. முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  19. இலவசமாய் மறதி.
    இதுதானே
    வேண்டும்.

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.
    வெற்றி பெறவேண்டும்.

    ReplyDelete
  20. இலவசமாய் பரிசும் யாராவது தராங்களா!?

    ReplyDelete
  21. செம ஸ்மூத்தா போய்கிட்டு இருந்த கவிதையை, டப்புன்னு 'தோல்விக்கு' கொண்டு போயிட்டீங்களே. காதல்னாலேயே தோல்விதானா?

    "காதலால் நானும்
    மகிழ்ந்திருந்தேனே!
    இலவசமாய்க்
    கல்லறை
    ஏனடி நீயும் தந்தாய்?"

    காதலால் நாமும்
    மகிழ்ந்திருந்த போது
    பரிசாய்
    மழலையும் வந்ததோ
    இலவசமாய்-னு

    பாசிட்டிவா கொண்டு போயிருக்கலாமோ?

    நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. தேன்கூடு போட்டி படைப்புகள் விமர்சனம்

    http://valai.blogspirit.com/archive/2006/11/03/விமர்சனங்கள்-இலவசம்.html

    ReplyDelete
  23. தேன்கூடு போட்டி படைப்புகள் விமர்சனம் இங்கே

    http://valai.blogspirit.com/archive/2006/11/03/விமர்சனங்கள்-இலவசம்.html

    ReplyDelete
  24. Dear சிபி,

    "காதலால் நானும்
    மகிழ்ந்திருந்தேனே!
    இலவசமாய்க்
    கல்லறை
    ஏனடி நீயும் தந்தாய்?"

    super , All the Best,

    (This my first comment)

    Gopinath

    ReplyDelete
  25. காதல் வாங்கினாலே துயரம் இலவசமோ??? :((

    கவிதை நன்றாக இருந்தது!
    போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  26. இலவசமாய் கிடைத்த காதல்..
    இழந்தபின் தெரியும் அருமை..
    இனிமையான கவிதை

    ReplyDelete
  27. அருமையான கவிதை சிபி. தொடர்ந்து இப்படியானன கவிதைகளை எதிர்பாக்கிறேன்.

    ReplyDelete
  28. //நினைவினைக் கொடுத்த
    இறைவா நீயும்
    இலவசமாய்
    மறதியைக் கொடுத்தால்
    குறைந்தா போவாய்?//

    தேன்கூடு போட்டிக்கா? வாழ்த்துக்கள் சிபி..வெற்றி பெற..

    ReplyDelete
  29. வெர்றிக்கு வாழ்த்துக்கள் சிபி

    ReplyDelete
  30. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  31. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  32. வாழ்த்துகள்!!!!!
    :)

    ReplyDelete
  33. நல்ல கவிதை!
    வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சிபி.

    நேரமின்மையால் முன்னமே படிக்க முடியாது போயிற்று

    ReplyDelete
  34. வெற்றிக்கு வாழ்த்துக்கள் சிபி!!!

    ReplyDelete
  35. it great works and If you have a moment, please visit my site: the lawyer

    ReplyDelete
  36. இலவசமாய் எவ்ளோ கொடுத்தீங்க நடுவருக்கு????

    வாழ்த்துக்கள் சிபி.

    (எப்படியோ நயன் சிம்பு வ பிரிச்சிட்டீங்க....ஹ்ம்ம்ம்ம் நல்லா இருந்தா சரி.)

    ReplyDelete
  37. //நினைக்க தெரிந்த மனமே, உனக்கு மறக்க தெரியாதா?

    பழக தெரிந்த மனமே, உனக்கு விலக தெரியாதா?
    //

    நல்ல படலை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நாகையாரே!

    ReplyDelete
  38. //ஆஹா எங்கே மறைத்திருந்தீர்கள் இந்த வெட்கப்பூக்களை ?? வெட்கப்படும் காதலான அழகு கவிதை இலவசமாய் எங்களுக்கு //

    ஆஹா! நவீன் பிரகாஷே நம்ம கவிதையைப் பாராட்டி இருக்கிறாரே!

    மிக்க நன்றி! நவீன் பிரகாஷ்!

    ReplyDelete
  39. //என முடித்திருந்தால் ஒரு பஞ்ச் இருந்திருக்குமோ?
    //

    எஸ்.கே!

    பஸிடிவாக எழுதலாம்தான்.
    பாஸிடிவான முடிவு கவிதை எழுதும் எண்ணத்தைத் தோற்றுவிக்கவில்லை என்பது என் பார்வை!

    ReplyDelete
  40. மிக்க நன்றி கலை அரசன் அவர்களே!

    ReplyDelete
  41. //சிபியாரே,
    வாழ்க நின் புகழ்!
    வெற்றிக் கனியை
    பறிக்க
    வாழ்த்துக்கள்! //

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சோம்பேறிப்பையன் அவர்களே!

    ReplyDelete
  42. //கலக்குங்க.
    கவிதை நல்லா இருக்கு.
    //

    பேட் நியூஸ் இந்தியா அவர்களே,
    மிக்க நன்றி!

    ReplyDelete
  43. //அதென்ன சிபி, தலைப்புக் கொடுத்த அடுத்த நொடியே கவிதை எழுதித் தள்ளிடுறீங்க!!
    //

    பொன்ஸ்! நீங்க கேட்ட மாதிரியே இன்னும் சிலரும் கேட்டிருக்காங்க!

    ஒரு சில தலைப்புகள் கேட்டவுடனே தானா கவிதை தோணுது! அதுவும் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில்!

    அப்படி எழுதின கவிதைகள்தான் மரணம், இலவசம் எல்லாம்!

    :)

    ReplyDelete
  44. //போட்டிக்கான முதல் படைப்பே அசத்தலாக வந்திருக்கிறது. முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்!!!
    //

    தலைப்பு கொடுத்த லக்கியாரின் பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  45. //நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.
    வெற்றி பெறவேண்டும்.
    //

    மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே!

    ReplyDelete
  46. //இலவசமாய் பரிசும் யாராவது தராங்களா!?
    //

    இந்த முறை வெற்றி என்னும் மூன்றாம் பரிசை தந்திருக்கிறார்கள் வாசகர்கள் தமிழி!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  47. //பாசிட்டிவா கொண்டு போயிருக்கலாமோ?
    //

    நெல்லை சிவா!
    இதற்கான பதிலை ஏற்கனவே எஸ்.கே அவர்களுக்கு சொல்லி இருக்கிறேன்!
    நன்றி!

    ReplyDelete
  48. சிந்தாநதி,
    தங்கள் அழகிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  49. //super , All the Best,//

    கோபிநாத்,
    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  50. //காதல் வாங்கினாலே துயரம் இலவசமோ??? :((
    //

    மிக்க நன்றி அருட்பெருங்கோ அவர்களே!

    ReplyDelete
  51. //இலவசமாய் கிடைத்த காதல்..
    இழந்தபின் தெரியும் அருமை..
    இனிமையான கவிதை
    //

    சாத்வீகன்,
    அழகிய விமர்சனத்திற்கு நன்றி!

    ReplyDelete
  52. //அருமையான கவிதை சிபி. தொடர்ந்து இப்படியானன கவிதைகளை எதிர்பாக்கிறேன்//

    மிக்க நன்றி யு.பி.தர்சன்,
    நிச்சயம் எழுதுகிறேன்!

    ReplyDelete
  53. //தேன்கூடு போட்டிக்கா? வாழ்த்துக்கள் சிபி..வெற்றி பெற..
    //

    மிக்க நன்றி கார்த்திகேயன்!

    ReplyDelete
  54. //நன்றாக வந்திருக்கிறது கவிதை//

    காண்டீபன்,
    தங்கள் பார்வையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  55. //வெற்றிக்கு வாழ்த்துக்கள் சிபி //

    மிக்க நன்றி சிறில் அலெக்ஸ்!
    தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. அருட்பெருங்கோ வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  57. மிக்க நன்றி எஸ்.கே அவர்களே!

    ReplyDelete
  58. //நல்ல கவிதை!
    வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சிபி.
    //

    மிக்க நன்றி ராசுக்குட்டி!

    ReplyDelete
  59. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கண்ணபிரான் ரவி சங்கர்!

    ReplyDelete
  60. மியூசிக் பிளேயர்,
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  61. //இலவசமாய் எவ்ளோ கொடுத்தீங்க நடுவருக்கு????
    //

    ஆஹா! கிளம்பீட்டாங்கைய்யா! கிளம்பீட்டாங்கைய்யா!


    //வாழ்த்துக்கள் சிபி.//

    மிக்க நன்றி மனசு!

    //
    (எப்படியோ நயன் சிம்பு வ பிரிச்சிட்டீங்க....ஹ்ம்ம்ம்ம் நல்லா இருந்தா சரி.) //

    இதுக்கு நான் காரணமில்லை! 1000+1 காரணம் என்று அம்மணியே சொல்லி இருக்கிறார்.

    நானும் என்னோட லிஸ்டை அப்டேட் பண்ணிட்டேன். தெரியாதா உமக்கு?

    ReplyDelete
  62. //செம ஸ்மூத்தா போய்கிட்டு இருந்த கவிதையை, டப்புன்னு 'தோல்விக்கு' கொண்டு போயிட்டீங்களே.//

    இதுவே என் கருத்தும். கவிதை நன்றாக இருக்கிறது. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  63. வாழ்த்துகள் சிபி

    ReplyDelete
  64. கவிதை அபாரம் சிபி, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  65. //வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சேதுக்கரசி அவர்களே!

    ReplyDelete
  66. //வாழ்த்துகள் சிபி //

    மதுமிதா! மிக்க நன்றி!

    ReplyDelete
  67. //கவிதை அபாரம் சிபி, வாழ்த்துக்கள்! //

    திவ்யா! மிக்க நன்றி!

    ReplyDelete