Tuesday, August 19, 2008

மழைக்கால இரவுப் பொழுது

ஒரு மழைக்கால
இரவுப் பொழுது
மறக்காத உன்
நினைவுகள்

விழித்திரையில்
ஈரம் உலர
இன்னும் சிறிது
நேரமாகலாம்!

கொதித்திருந்த
உள்ளத்தில்
இப்போது
அமைதியான
ஜதிகளாய்
உன்
கெஞ்சிய வார்த்தைகள்!

முகம் பார்த்து
நீ
கேட்டாய்!
உன்னை மறந்துவிடுமாறு!

என் உயிர்
பார்த்துக்
கேட்கத்
துணிவிருந்ததா உனக்கு?

கொட்டும் கண்ணீருடன்
தலை குனிந்து
திரும்பிச் சென்றாய்!

என்றேனும் ஒருநாள்
என்னை நீ
நினைவு கூறக்கூடும்!

அதற்காகவேனும்
எடுத்துக் கொள்
என் நினைவுகளை
எங்கேனும் உன்
இதயத்தில் ஒரு
மூலையில்!

9 comments:

  1. கவிதை சூப்பரா இருக்கு... :)

    ReplyDelete
  2. //விழித்திரையில்
    ஈரம் உலர
    இன்னும் சிறிது
    நேரமாகலாம்!//

    வெளியில மழை பெய்யும் சமயத்தில் அழகான ஒரு மழை-காதல் கவிதை..

    ReplyDelete
  3. எல்லோருக்கும் மறக்க முடியாத மழைக்காலம் இருக்கும் போல...

    ReplyDelete
  4. கவிதை அருமை:)

    ReplyDelete
  5. சிபி...
    மழை விட்ட வீதிகளில்
    காதலார நடக்க விட்டிருக்கிறீர்கள்.. :)))

    ReplyDelete
  6. //கொதித்திருந்த
    உள்ளத்தில்
    இப்போது
    அமைதியான
    ஜதிகளாய்
    உன்
    கெஞ்சிய வார்த்தைகள்! //

    ஜதிகளாய்
    கொஞ்சியதா
    வார்த்தைகள்...??!!!

    அழகோ அழகு..!!!

    ReplyDelete