Wednesday, November 30, 2005

மரித்துக்கொண்டிருப்பது மனித இனம்தானே....!





உரிமைக்குரல் எழுப்பும்
வேட்டுச் சத்தங்கள்!
உலகின் செவிகளுக்கும்
கேட்கும் வண்ணம்!

சிறகுகள் பிய்ந்திடுமோ
என்ற அச்சம்
சமதானப் புறாக்களுக்கு
அந்த வான் மீது
வட்டமிட்டுப் பறக்க!

துப்பாக்கிச் சத்தத்தில்தான்
பொழுது விடிகிறது!
துப்பாக்கிச் சத்தத்தில்தான்
பொழுது மடிகிறது!

குண்டுகளின் முழக்கம்!
பினங்களின் குவியல்!
இரத்த ஆறுகள்!
இவற்றுக்கிடையில்
ஏதேனும் ஒரு இனம்
வெல்லத்தான் போகிறது!

ஆனால்
அதுவரை
மரித்துக்கொண்டிருப்பதென்னவோ
மனித இனம்தானே....!

2 comments:

  1. "சிறகுகள் பிய்ந்திடுமோ
    என்ற அச்சம்
    சமதானப் புறாக்களுக்கு"

    ரொம்ப நல்லா இருக்கு

    அன்புடன்
    கீதா

    ReplyDelete
  2. பார்வையிட்டமைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க கீதா.

    ReplyDelete