Thursday, January 05, 2006

என் தமிழுக்கு அர்ப்பணம்...!



தாளொன்று எடுத்து
தமிழில் ஓர் சொல்
எழுதும்போதெல்லாம்தான்
உயிரோடும், உணர்வோடும்
இருப்பதாய் உணர்கிறேன் நான்.

என் தாய் தந்த
தமிழே ! - என் ஊனின்
தணியாத தழலே

நானே உனக்கு
அர்ப்பணம்..!
என் கவிதைகள்
என்ன விதிவிலக்கா..?

1 comment:

  1. நன்றி மறைக்காடன் அவர்களே!

    தமிழுக்காக தன்னை அர்ப்பணித்தோர் எத்தனையோ பேர் உண்டு. நான் ஒரு சிறு துரும்பு. அவ்வளவே!

    ReplyDelete