Friday, June 19, 2009

வீர வணக்கங்கள்

வீரர்கள்
வீழ்த்தப்படுவதில்லை!
விதைக்கப் படுகின்றனர்!

விதைகள்
விருட்சங்களாகும்
விரைவில்!

நாங்கள்
பிறந்த இடம்
தவறாகிவிட்டது!
இல்லையெனில்
உன்னுடனேயே
இருந்திருப்போம்
சமர் களத்தில்!

இது இரங்கற்பா
ஆகிவிடாது!
நீ என்றென்றும்
இருக்கிறாய்
எங்கள் மனதில்!
எங்கள் உறுதியில்!
எங்கள் மனோதிடத்தில்!
நம்புகிறோம் இன்னும்!
உம் விடியல்
பிறக்கும்
விரைவில்!

2 comments:

  1. சரியான கவிதை ,

    வீரனுக்கு மரணம் விருது.

    நன்றி நண்பா!

    நம்பிக்கையையும் முயற்சியையும் விடாமல் போராடுவோம்.

    நானும் தமிழக தமிழன் தான்‍ சொல்ல வெட்கப்படுகிறேன்.

    ஆனால் தொடருவோம் நண்பா!

    ReplyDelete
  2. நாங்கள்
    பிறந்த இடம்
    தவறாகிவிட்டது!
    இல்லையெனில்
    உன்னுடனேயே
    இருந்திருப்போம்
    சமர் களத்தில்!

    இருக்கமான வரிகள்.. நெஞ்சை அடைக்கிறது..

    ReplyDelete